close
Choose your channels

திருமணக் கடனை அடைக்க… போலீஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த பலே ஆசாமி!

Tuesday, April 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியில் தனியாக நின்று ஒரு போலீஸ் அதிகாரி வாகனச் சோதனையில் ஈடுபடுவதாகவும் மேலும் அங்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உளுந்தூர் பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் தனியாக போலீஸ் உடையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமியை பிடித்து விசாரித்து உள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் சென்னை அமைந்தகரை பகுதியில் வசிக்கும் கஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தான் போலீஸ் இல்லை என்றும் தனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக வேண்டி போலீஸ் வேடமிட்டு கள்ளக்குறிச்சி ஒட்டிய திருநாவலூர், எலவனாசூர்கோட்டை பகுதியில் பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து போலியாக போலீஸ் வேடம் அணிந்த கஜேந்திரனை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 32 ஆயிரம் பணத்தையும் இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா நேரத்தில் போலீஸ் அதிகாரி வேடமிட்டு பண வேட்டையில் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.