close
Choose your channels

ரோபோ சங்கரின் மகளா இது? படுமார்டனாக மாறிய பாண்டியம்மா!

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் இந்த படத்திற்கு பின்னர் வேறு படங்களில் இதுவரை நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்று உள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமார்டன் உடையில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக ஆடம்பரமான மேக்கப்புடன் அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன

அடையாளமே தெரியாமல் மாடர்னாக மாறிய இந்திரஜாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் விரைவில் அவரது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அழகு என்பது கடவுளின் கையெழுத்து. அது கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நாம் மிஸ் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.