பவன் கல்யாண் அடுத்த படத்தில் குவியும் கோலிவுட் நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வசூலை பெற்றது. இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்துவிட்ட பவன்கல்யாண், இந்த நிலையை தக்க வைத்து கொள்ள தன்னுடைய அடுத்த படத்தில் தமிழில் புகழ் பெற்ற கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பவன்கல்யாண் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளனர். இருவரும் கோலிவுட்டில் பிரபலமானவர்கள் என்பதால் இந்த படத்தை பார்க்கும்போது தெலுங்கு டப்பிங் என்ற உணர்வு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு கோலிவுட் நடிகர் இணைந்துள்ளார். அவர்தான் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். ரோபோ சங்கர் நடித்த ஒருசில படங்களின் தெலுங்கு டப்பிங்களை பார்த்த இயக்குனர் அவரது நடிப்பை பாராட்டியதோடு தற்போது வாய்ப்பும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஹீரோ தவிர கிட்டத்தட்ட கோலிவுட் நட்சத்திரங்களே அதிகம் உள்ள இந்த படம் தமிழிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியை தடுத்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை சென்று லைகா நிறுவனத்தின் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை குறித்தும் பேசவிருந்த நிலையில் அவரது பயணத்தை தமிழக அரசியல் தலைவர்கள் சிலபல காரணங்களை கூறி தடுத்துவிட்டனர்.

மீண்டும் ஒரு மெரீனா போராட்டமா? போலீசார் குவிப்பால் பதட்டம்

கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் சென்னை மெரீனா என்றாலே அது ஒரு சுற்றுலா பகுதி என்பதே மறந்து, மாணவர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'டோரா' ரன்னிங் டைம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்தும் உள்ள வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமுத்திரக்கனி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா தேதி அறிவிப்பு

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்ற நாசர் தலைமையிலான இளைஞர்கள் அணி, கடந்த சில மாதங்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது