close
Choose your channels

இளைஞருடன் நெருக்கமான புகைப்படம்: காவல்துறையில் புகார் அளித்த 'ரோஜா' சீரியல் நடிகை!

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஷாமிலி சுகுமார். இவர் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வருவதாக மர்ம நபர் ஒருவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் தொடங்கியதாகவும் அந்த பக்கத்தில் தன்னைப் பற்றியும் தனது பெற்றோர் குறித்து அவதூறான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மர்ம நபரின் போலியான பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் ஷாமிலி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவரது தாய் தந்தையை பற்றிய அவதூறான கருத்துக்களும் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாமிலியின் இந்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.