close
Choose your channels

விஜய்யின் குஷி பட பாணியில் இணையும் காதல் ஜோடிகள்! ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம்!

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்படங்களில் யுகங்களின் அடிப்படையில் எழுதப்படும், கதைகள் கூட சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது.

அந்த வகையில், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், விஜய் மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தின் பாணியில், ஒரே மருத்துவமனையில், ஒரே நேரத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் தற்போது கணவன், மனைவியாக மாற உள்ளனர்.

1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 22ஆம் தேதி கிரேட் மான்செஸ்ட்டர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆண் குழந்தைக்கு டாம் என்றும், பெண் குழந்தைக்கு சவுனா கிரேசி என்றும் பெயரிட்டுள்ளனர் இவர்களுடைய பெற்றோர்.

பின் இருவரும் வெவ்வேறு பள்ளி, வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், தங்களுடைய பதினெட்டாவது வயதில் விதியின் வசமாக சந்தித்துள்ளனர். சந்தித்த நொடிப்பொழுதே இவர்களின் பிறந்த ரகசியம் குறித்து தெரியவந்துள்ளது.

இதனால், இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். முதல்முறையாக டாம் தன்னுடைய காதலை சவுனா கிரேசியிடம் தெரிவிக்க, ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்த சவுனா பின் ஒப்புக்கொண்டார்.

தற்போது இவர்கள் இருவரும் தங்களுடைய 27 ஆவது வயதில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை மிகவும் பெருமையுடன் கூறியுள்ள இவர்கள், தங்களுடைய திருமணம் பிறந்தபோதே மருத்துவமனையில் முடிவாகிவிட்டதாக தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.