close
Choose your channels

பிரபல ரவுடி பினு போலீசில் சரண் அடைந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

Tuesday, February 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை ஆட்டிப்படைத்து வந்த பிரபல ரவுடி பினு, போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

கடந்த 6ஆம் தேதி ரவுடி பினு தனது பிறந்த நாளை நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் கொண்டாடிய போது திடீரென போலீசார் சுற்றி வளைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையில் 71 ரவுடிகள் கைது செய்யப்பட்டபோதிலும் ரவுடி பினு தப்பியோடிவிட்டார்.

இந்த நிலையில் ரவுடி பினுவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். உயிருடன் அல்லது என்கவுண்டர் செய்து பிடிக்க போலீசார் திட்டமிட்ட நிலையில் இன்று ரவுடி பினு சரண் அடைந்தார். என்கவுண்டருக்கு பயந்தே அவர் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. சரண் அடைந்துள்ள ரவுடி பினுவிடம் போலீசார் அவர் மீதான வழக்குகள்  குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.