close
Choose your channels

காத்திருந்த அதிர்ச்சி: காணாமல் போன மனைவியை ஒரு கோடி செலவில் தேடிய கணவர்!

Friday, July 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திராவில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு மனைவியுடன் சென்ற கணவர், தனது மனைவி திடீரென காணாமல் போனதால், கடலில் விழுந்து இருக்கலாம் என்று நினைத்து கடலோர காவல்படைக்கு ரூபாய் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மனைவியை தேடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் தான் அவரது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியது தெரிய வந்ததை அடுத்து அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் சாய்பிரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் நேற்று விசாகப்பட்டினத்தில் கடற்கரைக்கு சென்றனர். அப்போது கடற்கரையில் இருந்த சீனிவாசனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கணவர் சீனிவாசன் கவனிக்காத நேரத்தில் திடீரென அவரது மனைவி சாய்பிரியா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தொலைபேசியில் பேசி முடித்தவுடன் மனைவியை காணவில்லை என்பதை அறிந்த கணவர் சீனிவாசன், சாய்பிரியா கடலில் விழுந்திருக்கலாம் என்று அச்சப்பட்டு காவல்துறைக்கு புகார் அளித்தார். இதனை அடுத்து ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கடலோர காவல்படையின் ஹெலிகாப்டரை வரவழைத்து கடல் முழுவதும் சாய்பிரியாவை தேடினர்.

இந்த நிலையில் சீனிவாசனுக்கு அவரது உறவினர் மூலம் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் நெல்லூரில் சாய்பிரியா பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சாய்பிரியாவை விசாகப்பட்டினம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது ரவி என்ற நபரை தான் காதலித்ததாகவும் திருமணத்துக்கு பின்பும் அவருடன் பழகி வந்ததாகவும், கடற்கரைக்கு சென்றபோது கணவர் அசந்த நேரத்தில் அங்கிருந்து தப்பித்து காதலர் ரவியுடன் நெல்லூர் சென்றதாகவும் கூறியுள்ளார். காதலனுடன் சென்ற காதலியை தேடுவதற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்த கணவன் நொந்து போனதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.