close
Choose your channels

சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

Friday, September 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று பள்ளிக்கரணை அருகே குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பேனர் விழுந்ததால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சுபஸ்ரீ குடும்பத்தினர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் அளிக்க வேண்டும் என்றும், அந்த தொகையை அலட்சியமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து வசூலித்து சுபஸ்ரீ குடும்பத்தினர்களிடம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமின்றி பேனர் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாநகராட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ப்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பேனர் வைக்க மாட்டோம் என அறிவிப்பு விடுத்த கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.