close
Choose your channels

வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த பிரபல நடிகர்!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ள செய்தி சற்று முன் வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக தமிழகம், புதுவை, கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதியாக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று தமிழகம் உள்பட தென்மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பிரபல நடிகர் பிரபாஸ் ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். ஏற்கனவே ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, சிரஞ்சீவி, மகேஷ்பாபு உள்ளிட்டோர் தலா 25 லட்சம் ஆந்திர அரசுக்கு வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் திருப்பதி உள்பட பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரபாஸ் ரூபாய் ஒரு கோடி அளித்துள்ளதால் ஆந்திர அரசின் மீட்பு பணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.