'கோச்சடையான்' நடிகையிடம் ரூ.27 லட்சம் பொருட்கள் திருட்டு.. சில மணி நேரத்தில் அகப்பட்ட திருடன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்த நடிகையின் காரில் இருந்து 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போன நிலையில், சில மணி நேரத்தில் அந்த திருடன் அகப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'பொம்மலாட்டம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ருக்மணி விஜயகுமார். இதனை அடுத்து, அவர் 'ஆனந்த தாண்டவம்', 'கோச்சடையான்', 'காற்று வெளியிடை' உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ருக்மணி விஜயகுமார் சமீபத்தில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வாக்கிங் செல்வதற்காக தனது காரில் வந்திருந்தார். அவருடைய காரில் விலை உயர்ந்த கைப்பை, பணப்பை, வைர மோதிரங்கள், ரோலக்ஸ் கடிகாரம் ஆகியவை இருந்தன. வாக்கிங் செல்லும் போது, அவர் காரை பூட்ட மறந்துவிட்டார்.
இதை பயன்படுத்திக் கொண்ட அருகில் இருந்த டாக்ஸி டிரைவர் ஒருவர், காரில் இருந்த பொருட்களை திருடி மாயமாகிவிட்டார். இது குறித்து ருக்மணி காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சில மணி நேரத்தில் திருடிய குற்றவாளியை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மஸ்தான் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments