close
Choose your channels

சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.3000 கோடியில் திட்டங்கள்!

Sunday, September 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய உலக வங்கி உதவியுடன் ரூ.3000 கோடியில் திட்டங்களுக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த திட்டங்களை விரைவில் உலக வங்கி இறுதி செய்யும் என்ற தகவல் சென்னை மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கனமழை பெய்தாலும், கோடையில் தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடுகிறது. இதனை தவிர்க்க வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளத்தைத் தணிப்பதற்கும், கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்கும், சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையார் மற்றும் கோசஸ்தலையர் உள்ளிட்ட பல்வேறு நதிப் படுகைகளில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பெய்த சராசரி மழைப்பொழிவுவை கணக்கில் கொண்டு தண்ணீர் தேவைக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக WRD அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்நிலைகளை பாதுகாப்பது மட்டுமின்றி நிலத்தடி நீரை சேமிப்பதிலும் WRD இந்த திட்டத்தில் இணைக்கவுள்ளது.

சென்னையை சுற்றியுள்ள 60 நீர்நிலைகளின் சேமிப்பு திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 30 ஆண்டுகளில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கான நிதி உதவி இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்படும் என்றும், உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவில் சுமார் 30% முதல் கட்டத்தில் வெளியிடப்படும் என்றும், இந்த திட்டங்கள் ஒவ்வொரு கட்டமாக எடுத்து ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும், ”என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் சென்னையின் தண்ணீர்பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.