ரூ.3.5 கோடி கொள்ளை: அஜித், விக்ரம் பட நடிகரிடம் விசாரணை!

  • IndiaGlitz, [Sunday,June 06 2021]

கேரளாவில் ரூபாய் 3.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் அஜித், விக்ரம் பட நடிகரிடம் விசாரணை நடத்த இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது பிரச்சாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட 3.5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது, இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 1.25 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பாக 19 பேர்கள் வரை கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்த பணம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியின் தொகுதிக்கு செலவு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் சுரேஷ் கோபியிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருடைய பணம்? என்பது சுரேஷ் கோபிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுவதால் அவருடைய வாக்குமூலம் இந்த வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நடிகர் சுரேஷ்கோபி அஜித் நடித்த ’தீனா’ விக்ரம் நடித்த ’ஐ’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராஜ கோபாலனா...? காம கோபாலனா....? 250 கேள்விகள்... திடுக்கிடும் தகவல்கள்...!

ஆசிரியர் ராஜகோபாலன் செய்த மற்றொரு கேவலமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்பது குறித்த ஆலோசனை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் 12ஆம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக

தல பத்திச் சொல்ல ஒரு வார்த்தை பத்தாது… உருகும் முன்னணி கிரிக்கெட் வீரர்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான்.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் துவங்குங்கள்....! பிரதமருக்கு முதல்வர் கடிதம்.....!

மதுரை மாவட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவாக துவங்க வேண்டும், என்று பாரத பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமனக்குட்டி கெட்டப்பில் பிக்பாஸ் ஷிவானி: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார் என்பதும் தெரிந்ததே.