'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரையிட்ட தியேட்டருக்கு அபராதம்: என்ன காரணம்?

வினேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை திரையிட்ட தியேட்டருக்கு ரூபாய் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வசூல் செய்தது என்பதும் இந்த படத்தின் மொத்த வசூல் 60 கோடிக்கும் மேல் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரத்தில் சில குளறுபடி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் பல திரையரங்குகளில் வசூல் நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள திரையரங்கில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டிக்கெட் விற்பனை குறைத்து காட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த தியேட்டருக்கு 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழகத்தின் பல திரையரங்குகளில் டிக்கெட் கணக்கை தவறாக சித்தரிப்பதாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரஜினியின் ’அண்ணாத்த’ அஜித்தின் ’வலிமை’ போன்ற படங்களுக்கும் இதே போன்று போலி வசூல் நிலவரங்கள் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் முறையில் டிக்கெட் வழங்கும் முறையை அமல்படுத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

More News

மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பா? படக்குழுவினர் விளக்கம்!

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர் 

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரபல நடிகர் படத்தின் டிரைலர் ரிலீஸ்!

2022ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பிரபல நடிகர் நடித்த படத்தின் டிரைலர் கிரிக்கெட் மைதானத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மகனுக்கு கிடைத்த பட்டம்: பெருமிதம் கொள்ளும் சரத்குமார்-ராதிகா!

மகனுக்கு கிடைத்த பட்டத்தை நினைத்து பெருமிதம் கொள்வதாக சரத்குமார் மற்றும் ராதிகா தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருமண தினத்திலேயே பிறந்த குழந்தை: நிக்கி கல்ராணி குடும்பத்தினர் டபுள் சந்தோஷம்

நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி திருமணம் நடந்த அதே நாளில் நிக்கி கல்ராணி வீட்டில் இன்னொரு விசேஷம் நிகழ்ந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

நடிகை மாளவிகா மோகனனுக்கு பரிந்துரை கூறிய கார்த்தி சிதம்பரம் எம்பி!

சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் பிரபல நடிகை மாளவிகா மோகனனுக்கு டுவிட்டர் மூலம் பரிந்துரை செய்துள்ளார்.