பரணி, ஓவியாவின் நிலைக்கு தள்ளப்பட்ட காயத்ரி

  • IndiaGlitz, [Saturday,August 12 2017]

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார் என்பதை இன்று அல்லது நாளை கமல்ஹாசன் அறிவிப்பார் என்ற நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி சக்தி வீட்டுக்கு கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் ரைசாவை தவிர அனைவருமே எவிக்சன் பட்டியலில் இருந்த நிலையில் பிக்பாஸ் நேற்று ஒரு டாஸ்க் மூலம் காயத்ரியை மட்டும் காப்பாற்றிவிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் காயத்ரியை அடுத்து குறைந்த வாக்குகள் பெற்ற சக்தி இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக ஆடியன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவலின்படி தெரிகிறது.

தற்போதைய நிலையில் காயத்ரிக்கு சக்தியை தவிர வேறு துணை இல்லை. ஆனால் தற்போது சக்தியும் வெளியேறிவிட்டால் காயத்ரி தனிமைப்படுத்தப்படுவார். பரணியும், ஓவியாவும் தனிமைப்படுத்தப்பட்ட போது பெற்ற வேதனை என்ன என்பதை காயத்ரி இனியாவது புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தனிமையின் கொடுமை காயத்ரிக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே நேற்று பிக்பாஸ் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் புதிய வரவுகள் இருக்கும் என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அந்த புதிய நபர் யார் என்பது இந்த நிமிடம் வரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. தற்போது கிடைத்த புதிய தகவலின்படி பிரபல தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

விவாகரத்தால் ஏற்பட்ட மனவலி அதிகம்: அமலாபால்

தனுஷுடன் அமலாபால் நடித்த 'விஐபி 2' திரைப்படம் நேற்று வெளியாகி அபாரமான முதல் நாள் ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. நீண்ட விடுமுறை உள்ளதால் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது...

பட வாய்ப்புக்காக பகீர் நிபந்தனை: இளம் நடிகையின் அதிர்ச்சி தகவல்

திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நடிகைகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது...

பணம் கட்டத் தவறியதால் பரிதாபமாக பலியான 30 குழந்தைகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களில் சிகிச்சை பெற்று 30 குழந்தைகள் பலியானது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது...

அப்புறம் மக்கள் வாக்களிப்புக்கு என்ன மரியாதை பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஒருவாரமாக பெரும்பாலானோர் பார்ப்பதில்லை என்றாலும் ஒருசிலர் அரைகுறையாக பார்த்து வருகின்றனர். அதேபோல் இந்த வாரம் ரைசாவை தவிர அனைவரும் எவிக்சனில் இருக்கின்றனர்...

எனக்கு தனிப்பட்ட முறையில் 100% மிகப்பெரிய இழப்பு தான். விஷால்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிந்துவிட்டது. இந்த படம் வெகுவிரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...