முதல் படத்தின் டைட்டில் கடைசி படத்திற்கு.. 'நாளைய தீர்ப்பு' குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் நடித்த முதல் படத்தின் டைட்டிலான ’நாளைய தீர்ப்பு’ என்ற டைட்டில் அவரது கடைசி படமான ’தளபதி 69’ படத்திற்கு வைக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தனது கருத்தை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69’ படத்தை எச் வினோத் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 69% முடிந்து விட்டதாகவும், டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடொக்சன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான தகவலின் படி, இந்த படத்திற்கு ’நாளைய தீர்ப்பு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படம் தான் ’நாளைய தீர்ப்பு’. இந்த படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார், அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கதை எழுதியிருந்தார்.
இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் தான் அவரது கடைசி படமாக ’தளபதி 69’ படத்திற்கும் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ்ஏ சந்திரசேகர் கூறிய போது, “ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. என்னுடைய டைட்டில், அவர் முதல் முதலாக ஹீரோவாக நடித்த படம். இந்த டைட்டிலை தான் வைக்கப் போவதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை இந்த டைட்டிலை அவர் தேர்வு செய்தால் ரொம்ப நல்லா இருக்கும். எனக்கும் சந்தோஷமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments