விஜய்க்கு நெருக்கடி தருவது யார்? எஸ்.ஏ.சந்திரசேகர் பிரத்யேக பேட்டி!

விஜய்க்கு நெருக்கடி தருவது யார்? என எஸ் ஏ சந்திரசேகர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தளபதி விஜய் அவர்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் அரசுகளாலும் சில அமைப்புகளாலும் நெருக்கடி ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு நெருக்கடி தருவது யார் என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் மற்றும் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்க்கு யாரும் நெருக்கடி தருவது இல்லை என்று கூறினார் விஜய்க்கு ஒரு சிலர் நெருக்கடி தருவதாக ஊடகங்கள்தான் கூறிக் கொண்டிருக்கின்றன என்றும் ஆனால் என்னை பொறுத்தவரை விஜய்க்கு யாரும் நெருக்கடி தரவில்லை என்றும் கூறினார். அவர் யாரையும் ஏமாற்றவில்லை, எந்த தயாரிப்பாளரையும் ஏமாற்றவில்லை எனவே அவருக்கு ஏன் நெருக்கடி ஏற்பட போகிறது என்றும் தெரிவித்தார்

மேலும் நாங்கள் எல்லோரும் ஒரு பொதுவான மனிதர்கள் என்றும் எங்களுக்கு யாரும் நெருக்கடி தரவில்லை என்றும் கூறினார். மேலும் விஜய் ரசிகர் மன்றம் என்ற அமைப்பை நான் ஒரு ஒழுங்குபடுத்தவே முயற்சி செய்து வருகிறேன் என்றும் எதிர்காலத்தில் அது ஒரு சமூக அமைப்பாக வேண்டும் என்றும் அதில் வியாபாரிகள் யாராவது இருந்தால் அவர்களை நீக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்றும் எஸ்.ஏ.சி கூறினார்

மேலும் ஒரு தந்தையாக விஜய் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் ஒருசில நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்றும் அனைத்து தந்தையும் செய்வதைத்தான் நானும் செய்து வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்