விஜய் உயர்வுக்காக இயக்குனர்களின் படியேறியவர் எஸ்.ஏ.சி.. ஆர்வி உதயகுமார்..


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆரம்ப கட்டத்தில், விஜய் உயர்வுக்காக எல்லா இயக்குநர்களின் வீட்டு படி ஏறியவர் எஸ்.ஏ. சந்திரசேகர் என்றும், விஜய்யின் உயர்வுக்கு அவரது தந்தை ஒரு முக்கிய காரணம் என்றும், திரைபட விழா ஒன்றில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் ராவ் நடிப்பில் உருவான "ஜின்" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தின் நாயகியாக ’ஜோ’ படத்தில் நடித்த பாவ்யா திரிகா நடித்துள்ளார். மேலும், பாலசரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே 30ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.வி. உதயகுமார், "சினிமாவில் ஒருத்தர் வந்து முன்னேற வேண்டும் என்று நினைத்தால், அதை யாராலும் தடுக்க முடியாது. என் அப்பாவுடன் நான் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்த நிலையில், நானும் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இயக்குநர் என்ற பெயரை பெற்றேன். எனவே, சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தலையில் எழுதி இருந்தால், அதை யாரும் தடுக்க முடியாது," என்று கூறினார்.
"ஆரம்பகட்டத்தில் விஜய்யின் வெற்றிக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய காரணமாக இருந்தார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்த, அவர் ரொம்பவே கஷ்டப்பட்டார். பல இயக்குநர்களின் படி ஏறி, ‘என் பையனை வளர்த்துவிடுங்கள்’ என்று கோரிக்கை விடுத்தார். விஜயின் உயர்வுக்கு அவரது தந்தை ஒரு முக்கிய காரணம்," என்றும் உரையாற்றினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments