close
Choose your channels

தம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி

Monday, November 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்று நினைத்த பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டுமென்றும் நேற்று நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி வேண்டுகோள் விடுத்தூள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சில நாட்களாக ஒருசிலர் பேசி வருகின்றனர். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.

கமலஹாசன் துணிச்சலுடன் அரசியலில் களமிறங்கியது சாதாரண விஷயம் அல்ல. அவரை போலவே ரஜினிகாந்த் அவர்களும் அரசியலுக்கு வேண்டுமென நான் மட்டுமின்றி அவரது கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசியலில் கமலஹாசனும் ரஜினிகாந்தும் சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது நடக்கும்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் இருவரும் ஆட்சி செய்தது போதும் என நினைத்தால் அதன்பின்னர் உங்கள் தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்’ என்று எஸ்ஏ சந்திரசேகர் பேசினார். தம்பிகள் என அவர் யாரை மனதில் வைத்து பேசியுள்ளார் என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.

மேலும் கமல்ஹாசன் அவர்களை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும், ஆனால் ரஜினிகாந்த் அவர்களை ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இயக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.