தம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி

  • IndiaGlitz, [Monday,November 18 2019]

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்று நினைத்த பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டுமென்றும் நேற்று நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி வேண்டுகோள் விடுத்தூள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சில நாட்களாக ஒருசிலர் பேசி வருகின்றனர். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.

கமலஹாசன் துணிச்சலுடன் அரசியலில் களமிறங்கியது சாதாரண விஷயம் அல்ல. அவரை போலவே ரஜினிகாந்த் அவர்களும் அரசியலுக்கு வேண்டுமென நான் மட்டுமின்றி அவரது கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசியலில் கமலஹாசனும் ரஜினிகாந்தும் சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது நடக்கும்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் இருவரும் ஆட்சி செய்தது போதும் என நினைத்தால் அதன்பின்னர் உங்கள் தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்’ என்று எஸ்ஏ சந்திரசேகர் பேசினார். தம்பிகள் என அவர் யாரை மனதில் வைத்து பேசியுள்ளார் என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.

மேலும் கமல்ஹாசன் அவர்களை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும், ஆனால் ரஜினிகாந்த் அவர்களை ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இயக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

விமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அறிவித்ததில் இருந்து அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம்

கமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து நேற்று அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 'கமலஹாசன் 60' என்ற பெயரைக் கொண்ட

விஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'தளபதி 64' படத்தில் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.

போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்!

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர், தன்னை துணை நடிகர் ஒருவர் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதால், தான் கர்ப்பமாக இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளதால்

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி!

இலங்கை அதிபர் மைத்திரியபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைவதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய நேற்று பலத்த பாதுகாப்புடன் அந்நாட்டில் தேர்தல் நடைபெற்றது.