close
Choose your channels

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது: நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சி பதில் மனு!

Monday, September 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த இயக்கம் தற்போது இல்லை என்றும் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது பெயரை பயன்படுத்தி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எஸ்.ஏசந்திரசேகர் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது என்றும் தற்போது அந்த இயக்கம் இல்லை என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதமே விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ரசிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மட்டுமே தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அக்டோபர் 29-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.