ஒரு மாதத்திற்கு முன்னரே அரையிறுதி அணிகளை கணித்த சச்சின்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4வது அணி எது என்பது நாளைய பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளின் போட்டி முடிந்த பின்னர் தெரியவரும்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 316 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதாவது பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 400 ரன்கள் எடுக்க வேண்டும். அதன்பின்னர் வங்கதேச அணியை 84 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். இப்போதிருக்கும் வங்கதேச அணியை பாகிஸ்தான் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வெல்ல முடியுமா? என்பது கேள்விக்குறியே. இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறவே 99% வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இன்றைய நிலையை கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு மாதத்திற்கு முன்னரே சரியாக கணித்திருந்தார். சச்சின், 'அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெறும் என்றும் நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒன்று தகுதி பெறும் என்றும் ஒரு மாதத்திற்கு முன்னர் சச்சின் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சினின் அரையிறுதி கணிப்பு மிகத்துல்லியமாக இருந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

அரையிறுதிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றால் இந்தியா-இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதும். அனேகமாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி: திமுக அதிகாரபூர்வ அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகர்-தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? பிக்பாஸ் புரமோவில் வனிதா

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவை தெலுங்கானா மாநில போலீசார் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தனர்.

ஆணவக்கொலைக்கு எதிராக பொங்கிய இயக்குனர் பா.ரஞ்சித்

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சோலைராஜ் என்பவரும் ஜோதி என்ற பெண்ணும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்

பிக்பாஸ் புரமோவுக்கு '96' பின்னணி இசை ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோவை சுவாரஸ்யமாக அமைத்து வரும் பிக்பாஸ் நிர்வாகத்தினர் இன்று வெளியிட்டுள்ள இரண்டாவது புரமோவிற்கு பின்னணி இசையாக விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த '96' படத்தின் பின்னணி இசையை

அஜித் படத்துடன் மோதும் விக்ராந்த் படம்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி விக்ராந்த் நடித்த 'பக்ரீத்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது