ரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடவுளாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் தனது தீவிரமான ரசிகர் ஒருவரின் வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

சச்சின் தெண்டுல்கரின் கோடிக்கணக்கான தீவிர ரசிகர்களில் ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுதிர்குமார் செளத்ரி. இவரது வாழ்நாள் கனவு ஒருமுறையாவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான். இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் போட்டியை நேரில் பார்க்க செல்ல வேண்டுமானால் லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்பதால் இந்த முறையும் அவரது கனவு நனவாக முடியாமல் இருந்தது.

இதனையறிந்த சச்சின் தெண்டுல்கர் சுதிர்குமார் இங்கிலாந்து சென்று உலகக்கோப்பையை பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் தனது சொந்த செலவில் செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்ட சுதிர்குமார், 'எனது வாழ்நாள் கனவை நனவாக்கிய சச்சின் அவர்களுக்கு எனது நன்றி! கோப்பையுடன் திரும்பி வருவோம்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விமான நிலையத்தில் லண்டன் கிளம்பி செல்லும் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.