உயிரைக் காப்பாற்றிய டிராபிக் போலீஸ்க்கு நன்றி தெரிவித்த சச்சின்…நடந்தது என்ன?

இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், போக்குவரத்து காவலர் ஒருவரை நேரில் சென்று நன்றி கூறியதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன்சி குறித்தும் இந்த விவகாரத்தில் பிசிசிஐயின் போக்கு குறித்தும் ரசிகர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத ஆணிவேராக செயல்பட்ட சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து காவலர் ஒருவருக்கு நன்றி தெரிவித்து இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் நல்ல வேளையாக சச்சினின் நெருங்கிய தோழி ஒருவருக்கு சாலை விபத்து ஏற்பட்டதாகவும் அந்த விபத்தின்போது அவருடைய முதுகெலும்பு படு மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த ஒரு போக்குவரத்து காவலர் அவரை ஆடாமல் அசையாமல் மருத்துவமனையில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இந்த நிகழ்வை குறித்துத்தான் சச்சின் பேசியிருக்கிறார். மேலும் அந்த போக்குவரத்து காவலரை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்ததாகக் கூறிய அவர், இதுபோன்ற அழகான மனிதர்களால் தான் உலகம் நிறைந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் உயிரைவிட பணமும் நேரமும் பெரியது அல்ல என சச்சின் டெண்டுல்கர் போக்குவரத்து விதிமுறைகளைக் குறித்து பேசியிருப்பது சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் தக்க சமயத்தில் பெண் ஒருவருக்கு உதவிய போக்குவரத்து காவலருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More News

ஒரே ஷாட்டில் 5 நிமிட காட்சிகள்: 'மாநாடு' சிம்புவின் அசத்தல் வீடியோ!

 'மாநாடு'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பாலிவுட் பிரபலமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார்

லண்டன் சென்றது 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' குழு: ஆனால் படப்பிடிப்புக்கு இல்லையாம்!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. 

பாலிவுட் திரைப்படத்தில் ராஷிகண்ணா: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல நடிகை ராஷி கண்ணா பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானாலும் அதன்பின்னர் தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தினார் என்பதும் பல வெற்றி படங்களை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் நாயகி அறிவிப்பு!

நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் அடுத்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.