''பாகுபலி' படத்தின் போஸ்டர் முன் பலி கொடுத்த ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,July 11 2015]

நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமான ரிலீஸ் ஆன பாகுபலி' படத்தின் முதல் நாள் வசூலே சுமார் ரூ.30 கோடி என கூறப்படும் நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. பிரபாஸ், தமன்னா, சத்யராஜ் நடிப்பும், பிரமாண்டமான போர்க்காட்சிகளும் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டுபட்டு வருகிறது.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் வரும் போர்க்காட்சியில் போருக்கு செல்லும் முன் ராணா ஒரு விலங்கை பலி கொடுத்துவிட்டு போருக்கு கிளம்புவார். ஆனால் நாயகன் பிரபாஸ், போருக்காக ஒரு உயிர் பலியாவதை விரும்பாமல், தன்னுடைய கையை வெட்டி அந்த ரத்தத்தை கடவுளுக்கு பலியாக கொடுப்பார். இந்த காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் நிலையில், ஐதராபாத் அருகே பிரபாஸின் ரசிகர்கள் இந்த படம் ஓடும் தியேட்டர் முன்பு நிஜமாகவே ஆடு ஒன்றை வெட்டி பலி கொடுத்ததோடு, அதன் ரத்தத்தையும் பாகுபலி' படத்தின் போஸ்டர் மீது தெளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள 'பாகுபலி' திரைப்படத்தின் பிரமாண்டம் குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான டுவீட்டுக்கள் பதிவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி - ரசிகர்களின் விமர்சனம்

More News

போலீஸூக்கு சென்ற 'புலி' படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் டீஸரை படக்குழுவினர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு...

தமிழ் இனத்திற்காக ஒன்று சேர்ந்த அஜீத்-விஜய் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினிக்கு பிறகு மாஸ் நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். இரு நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டாலும், சில ஆக்கபூர்வமான பணிகளை இரு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து செய்வதுண்டு என்பதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்........

'பாகுபலி' விமர்சனம்

சில தமிழ்த் திரைப்படங்களில் அவற்றின் இயக்குனர்கள் தலைகாட்டும்போது திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள்...

பிசாசு நடிகையுடன் ஜோடி சேர்ந்த விஷ்ணு

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' திரைப்படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டும் நாயகியாகவும், பின்னர் படம் முழுவதும் பேயாகவும் நடித்தவர்...

தெலுங்கில் டப் ஆகும் துல்கார் சல்மான்-நித்யா மேனன் படம்

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஓகே கண்மணி' ...