கொரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் –க்கு 8 ஆவது நாளாக தீவிரச் சிகிச்சை!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

தமிழக மக்களிடையே நேர்மையால் பாராட்டப் பெற்றவர் சகாயம் ஐஏஎஸ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். மேலும் இவர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அரசியல் பேரவை எனும் அமைப்பை திரு சகாயம் துவக்கினார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் 20 தொகுதிகளில் வேட்பாளர்களையும் களம் இறக்கினார். இந்தத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்காத சகாயம் தன்னுடைய கொள்கை கோட்பாடுகளை தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே பரப்பி வந்தார்.

இப்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுட்ட சகாயத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்திய கொரோனா பரிசோதனையில் இவருக்கு கொரோனா இருப்பதும் உறுதிச்செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 8 நாட்களாகச் சிகிச்சை பெற்று வரும் சகாயத்திற்கு தற்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் தனிக்குழு அமைத்து சகாயத்திற்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சகாயத்தைத் தவிர கனிமொழி எம்.பி, துரைமுருகன், நடிகர் செந்தில் போன்ற பலருக்கும் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ, டைட்டில் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் தற்போது ஆர்யா நடித்து வரும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்

நீங்க திட்டறது எல்லாம் எனக்கு அவார்டு மாதிரி: பிரபல சீரியல் நடிகர்

நீங்கள் எனது நடிப்பை பார்த்து எவ்வளவு திட்டினாலும் அது எனக்கு அவார்டு கொடுப்பது மாதிரி என பிரபல சீரியல் நடிகர் ஒருவர் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு! பான்-இந்தியா திரைப்படம் என தகவல்

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ் அவர்கள் 'தளபதி 65' படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் திடீரென அதில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அடுத்த படத்திற்கான

உனக்கென்னப்பா சூப்பர் ஹீரோயின் கிடைச்சுட்டாங்க… நடிகர் சதீஷை கலாய்த்த பிரபலம்!

தமிழில் “மேயாதமான்” படத்தில் அறிமுகமானவர் இளம் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

தளபதி விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஜார்ஜியா ரசிகர்: வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் தற்போது 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார் என்பதும் அங்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே