close
Choose your channels

திரைப்படமாகிறது சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நாவல்!

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்கு சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. நாதஸ்வர கலைஞர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த நாவல் ஏற்கனவே கல்லூரி மாணவர்களால் நாடகம் நடத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நாவல் திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த தகவலை இந்நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ரஜினியின் 'பாபா', 'விஷாலின் 'சண்டக்கோழி, சண்டக்கோழி 2'. விக்ரமின் 'பீமா', 'பாலாவின் 'அவன் இவன்', உள்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள நிலையில் அவர் எழுதிய முழுநாவல் ஒன்று தற்போது திரைப்படமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாதஸ்வர கலைஞர்களாக நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர்களின் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.