4 வருடங்களுக்கு முன் இதே நாளில்.. சூர்யாவுடன் மோதிய சாய்பல்லவி!

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

சூர்யா, சாய்பல்லவி முதல்முறையாக இணைந்து நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' வெளியானதை அடுத்து ஒன்றரை வருடங்கள் கழித்து வெளியாகும் சூர்யாவின் அடுத்த படம் இதுதான் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை செல்வராகவனின் டீம் நிறைவேற்றும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு முன் சூர்யாவுடன் இதே நாளில் மோதிய அனுபவம் குறித்து சாய்பல்லவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாய்பல்லவி நடித்த முதல் படமான 'பிரேமம்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தான் வெளியானது. மலர் டீச்சர் கேரக்டரில் நடித்திருந்த சாய்பல்லவி இந்த ஒரே படத்தால் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றார். இதே நாளில் தான் சூர்யாவின் 'மாஸ் என்கிற மாசிலாமணி' வெளியானதாகவும், அன்று சூர்யாவுடன் மோதிய நிலையில் இன்று சூர்யாவுடன் இணைந்து நடித்த படம் கிட்டத்தட்ட அதே நாளில் வெளியாவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

சாய்பல்லவின் இந்த டுவீட்டை அவரது ரசிகர்கள் ரீடுவிட் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர். மேலும் 'பிரேமம்' படத்தின் நான்காவது வருடத்தையும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More News

சுழட்டி அடித்த ஸ்டண்ட் நடிகருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி!

தமிழ் சினிமாவில் தைரியமான கேரக்டர்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. தனது கேரக்டருக்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும்

ஐ.ஆர்.சி.டி.சியில் புகார் அளித்து அவமானப்பட்ட வாடிக்கையாளர்!

ரயில்களில் முன்பதிவு செய்ய ரயில்வே துறை தொடங்கியுள்ள இணையதளம் தான் ஐ.ஆர்.சி.டி.சி. இந்த இணையதளத்தில் சமீபகாலமாக கூகுள் விளம்பரங்கள் வருகின்றன.

அடுத்த தலைமுறைக்கு செல்லும் நெல் ஜெயராமனின் புகழ்!

இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட செய்ததில் பெரும்பங்கு நெல் ஜெயராமன் அவர்களுக்கு உண்டு

நேமிசந்த் ஜெபக் புதிய அறிவிப்பு இதுதான்!

பிரபல தயாரிப்பு நிறுவனம் நேமிசந்த் ஜெபக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை இன்று அறிவிக்கவுள்ளதாக நேற்று விளம்பரம் செய்திருந்தது.

திமுக எஃகு கோட்டைக்கு ரஜினியால் சேதாராமா? வைகோ பதில்

திமுக ஒரு எஃகு கோட்டை என்றும், ரஜினியால் அந்த கோட்டைக்கு எந்தவித சேதாரத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.