நீட் தேர்வு வேண்டாம்: மருத்துவரான தமிழ் நடிகை கருத்து!

  • IndiaGlitz, [Tuesday,September 28 2021]

நீட் தேர்வு வேண்டாம் என மருத்துவ படிப்பு படித்த தமிழ் நடிகை ஒருவர் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடத்தி வருகிறது என்பதும் இந்த தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என மருத்துவரும் தமிழ் நடிகையுமான சாய்பல்லவி தெரிவித்துள்ளார். இவர் இது குறித்து கூறிய போது ’மருத்துவ படிப்பு என்பது கடல் போன்றது என்றும் அதில் நுழைவு தேர்வு வைப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீட்தேர்வு விவகாரத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுபவர்கள் பக்கமே தான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை சாய்பல்லவியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சாய்பல்லவி தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

உன் அம்மா-க்கு இருக்குறது தான் எனக்கும் இருக்குது: பனிமலர் ஆவேச பேச்சு

உன் அம்மாகிட்டயும், உன் அக்காவிடமும், உன்னுடைய குடும்ப பெண்களிடம் இருப்பதுதான் அனைத்து பெண்களிடம் இருக்கிறது என ஆவேசமாக பனிமலர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேமிரா முன் அமலா: வைரல் புகைப்படம்!

கடந்த 90களில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவரும் நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியுமான அமலா, 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறார்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது: நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சி பதில் மனு!

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த இயக்கம் தற்போது இல்லை என்றும் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பிரபல யூடியூபர்… வலைவீசி தேடும் போலீஸ்!

“நாகை மீனவன்“ எனும் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் குணசீலன்.

இந்திய சினிமாவில் முதல்முறையாக நடிக்கும் மைக் டைசன்!

உலகம் முழுவதும் பிரபலமான குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் முதல் முதலாக இந்திய திரைப்படத்தில் அதுவும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது