ஐதராபாத் போலீசை பாராட்டிய பிரபல விளையாட்டு வீராங்கனை

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர்களும் இன்று அதிகாலை என்கவுண்டரில் ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

இந்த என்கவுண்டருக்கு தெலுங்கானா மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல சாலைகளில் பட்டாசு வெடித்து இந்த என்கவுண்டர் மரணங்களை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகளும் போலீசார்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த என்கவுண்டருக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் மட்டும் சட்டத்தின்படியே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கருத்தை கூறி வருகின்றனர்

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஹைதராபாத் போலீசாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது ’சிறப்பான வேலை செய்த ஹைதராபாத் போலீசுக்கு எனது சல்யூட்’ என்று ட்விட் செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

More News

என்கவுண்டர் சம்பவத்தை கொண்டாடும் பள்ளி, கல்லூரி மாணவிகள்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவரை நான்கு கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: ஐதராபாத்தில் பரபரப்பு

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளையும் போலீசார் என்கவுன்டர் செய்து கொலை செய்ததாக

15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.

ராஜஸ்தான் மாநிலம்  சிரோஹி மாவட்டத்தில் உள்ள சிபா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பீமாராம் தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் இன்று காலை விழுந்துள்ள்ளான்

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை மளிகை கடை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..!

உடல் தானம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருக்கும் நிலையில், உடல் தானம் மூலம் கிடைக்கும் உடல் பாகங்களை வைத்து அந்த உறுப்புகளை மற்றொருவருக்கு