ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தில் ஒப்பந்தமான 3வது நாயகி!

  • IndiaGlitz, [Saturday,May 18 2019]

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கி வரும் திரைப்படத்தில் ஏற்கனவே ஈஷா ரெபா மற்றும் நிகிஷா பட்டேல் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வரும் நிலையில் தற்போது 3வது நாயகியாக சாக்சி அகர்வல் ஒப்பந்தமாகி, படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த படத்தில் தான் ஒரு கிராமத்து பெண் கேரக்டரில் முதல்முறையாக நடித்து வருவதாகவும், திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்து பெண் கேரக்டர் என்பதால் நெல்லை பாஷையை உதவி இயக்குனர்களின் உதவியால் கற்றுக்கொண்டதாகவும், இந்த படத்தில் தனது கேரக்டரின் பங்கு சிறியதாக இருந்தாலும் முக்கியத்துவமான கேரக்டர் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சாக்சி அகர்வால் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 'காலா', அஜித்தின் 'விஸ்வாசம்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ள சாக்சி அகர்வால் தற்போது 'சிண்ட்ரெல்லா' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கார்த்தியின் கைதியும் 62 இரவுகளும்..

கார்த்தி நடிப்பில் 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. 

வயிற்றை கிழித்து திருடப்பட்ட 19 வயது பெண்ணின் குழந்தை! ஃபேஸ் புக் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவை சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து ஒரு குடும்பமே அவருடைய குழந்தையை திருடி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய தமிழக மாணவர்! டெல்லி பல்கலையில் பரபரப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் தமிழத்தின் வேலூர் பகுதியை சேர்ந்த எம்.ஏ இறுதியாண்டு மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

டப்பிங் கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட 'அயோக்யா' நாயகி!

விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'அயோக்யா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

முன்ஜாமீனா? கைதா? கமல் மனுமீது திங்களன்று தீர்ப்பு 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கமல்ஹாசன் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்