close
Choose your channels

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தில் ஒப்பந்தமான 3வது நாயகி!

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கி வரும் திரைப்படத்தில் ஏற்கனவே ஈஷா ரெபா மற்றும் நிகிஷா பட்டேல் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வரும் நிலையில் தற்போது 3வது நாயகியாக சாக்சி அகர்வல் ஒப்பந்தமாகி, படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த படத்தில் தான் ஒரு கிராமத்து பெண் கேரக்டரில் முதல்முறையாக நடித்து வருவதாகவும், திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்து பெண் கேரக்டர் என்பதால் நெல்லை பாஷையை உதவி இயக்குனர்களின் உதவியால் கற்றுக்கொண்டதாகவும், இந்த படத்தில் தனது கேரக்டரின் பங்கு சிறியதாக இருந்தாலும் முக்கியத்துவமான கேரக்டர் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சாக்சி அகர்வால் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 'காலா', அஜித்தின் 'விஸ்வாசம்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ள சாக்சி அகர்வால் தற்போது 'சிண்ட்ரெல்லா' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.