close
Choose your channels

மொட்டை மாடியில் மழையில் நனைந்து குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை!

Wednesday, November 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பக்கம் நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் என்னென்ன சேதங்களை உண்டாக்குமோ என தமிழக அரசும், தமிழக மக்களும் பதட்டத்தில் உள்ளனர்.

இன்னொருபக்கம் எதையும் காமெடியாக பார்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இந்த நிவர் புயலையும் விட்டு வைக்காமல் புயல் குறித்த மீம்ஸ்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் இந்த கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் நடிகைகளும் தங்கள் வழக்கமான பதிவுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சாக்சி அகர்வால் மொட்டை மாடியில் நின்று கொண்டு மழையில் நனைந்தபடி கவர்ச்சியான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஜெயம் ரவி நடித்த ’மழை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நீ வரும்போது...’ என்ற பாடலுக்கு அவர் குத்தாட்டம் ஆடுகிறார். மேலும் இதுமாதிரி மழையில் நனைந்து ஆட்டம் போடுவது என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்துகிறது என்று கூறியுள்ள சாக்சி அகர்வால் இன்றும் நாளையும் அனைவரும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.