close
Choose your channels

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்

Thursday, May 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விதவைத் தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் அவரது 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சேலம் அம்மாபேட்டையில் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கணவர் இறந்ததால் தனது 17 வயது மகள் மற்றும் மகனை காப்பாற்றுவதற்காகவே துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக்குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் 17 வயது மகள் மீது ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்குமார் பார்வை பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த அந்தப் பெண் அசோக்குமாரை துரத்தி அடித்து விட்டார். இதனால் ஆத்திரமான அசோக்குமார் அந்த பெண்ணுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த குமார் என்பவருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அந்தப் பெண் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 17 வயது சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தத் பெண் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்

விதவைத் தாயுடன் கள்ளக்காதலில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அவரது மகளை நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.