close
Choose your channels

இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தவருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட போலீசார்

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேலத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததோடு, அவர்களை பாலியல் தொழிலுக்கும் கட்டாயப்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பர்களின் உதவியோடு ஆதரவற்ற பெண்கள், பண ஆசையுடன் இருக்கும் இளம்பெண்கள் ஆகியோர்களை குறிவைத்து அவர்களுக்கு பண ஆசை காட்டி பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தி உள்ளனர். மேலும் சிலரை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி பெண்களோடு உல்லாசமாக இருந்த சில தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்த 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos