close
Choose your channels

ஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல்: தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்

Thursday, January 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிடர் மனைவி ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேலம் அருகே 62 வயது பாலசுப்பிரமணியம் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் தனது நண்பருடன் இணைந்து தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் கத்தி மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது

இந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது இந்த கொலையில் ஜோதிடர் இளையராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் நால்வரும் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை செய்தபோது இளையராஜா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்

தன்னுடைய மனைவிக்கும் தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்துக்கும் கள்ள உறவு இருந்ததாகவும் அதை தான் கண்டித்ததாகவும், ஆனால் இருவரும் கள்ள உறவைத் தொடர்ந்து நீடித்து வந்ததால் ஆத்திரமடைந்த தான் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். இவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.