close
Choose your channels

'மாஸ்டர்' கதை சரியில்லை: சல்மான்கான் அறிவிப்பால் படக்குழுவினர் அதிர்ச்சி!

Friday, August 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் சேர்த்து 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்றும் கூறப்பட்டது. தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாலிவுட்டிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தில் விஜய் நடித்த கேரக்டரில் சல்மான் கான் நடிக்க ஒப்புதல் தெரிவித்திருந்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ’மாஸ்டர்’ கதையை இந்திக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்திக்கு ஏற்றவாறு ’மாஸ்டர்’ கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சல்மான்கானிடம் கூறியபோது அவர் அந்த கதையை கேட்டு தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறியதோடு, இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக்கிலிருந்து சல்மான்கான் விலகி உள்ளதால் இந்த படம் திட்டமிட்டபடி இந்தியில் ரீமேக் செய்யப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.