close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பிரபல நடிகர்

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியில் இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக 13வது பகுதியாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தியில் இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு தினமும் ரூபாய் 8.5 கோடி சம்பளம் தரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் இந்தி 13வது நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதத்துடன் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அதிக ப்டியான வரவேற்பு காரணமாக ஐந்து வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு நாட்கள் தொடர்ந்து நடத்துவது மிகவும் கடினம் என்றும் அதனால் நிகழ்ச்சியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சல்மான்கான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று எனக்கு தோன்றினாலும் என் மனம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான்கான் விலகினால் அவர் இல்லாத மீதி ஐந்து வாரங்களுக்கு ஃபராகான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.