ஒரே மேடையில் அமலா - சமந்தா.. முன்னாள் மருமகள் மீது இன்னும் இவ்வளவு பாசமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சமந்தா மற்றும் அவருடைய முன்னாள் மாமியார் அமலா ஆகிய இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஜீ தெலுங்கு சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சமந்தாவுக்கு 15 வருட திரைப்பட பயணத்திற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதற்காக மேடைக்கு வந்த சமந்தா, தன்னுடைய 15 வருட திரைப்பட பயணத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும், “எப்போதும் நான் தெலுங்கு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவேன்” என்றும் கூறினார்.
அவர் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, நிகழ்ச்சியின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமலா, கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, அமலாவின் முகத்தில் ஒரு புன்னகையும் தெரிந்தது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “முன்னாள் மருமகள் மீது அமலாவுக்கு இவ்வளவு பாசமா?” என்றும், சமந்தா பேச்சுக்கு அமலா கைதட்டுகிறாரே! முன்னாள் மருமகளாக இருந்தாலும், அவர் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா?” எனக் கருத்துகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா இன்னும் மறுமணம் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com