close
Choose your channels

ராஜ்யசபா எம்பியின் சேலஞ்சை ஏற்று கொண்ட சமந்தா-நாகார்ஜூனன்

Sunday, July 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் அவ்வப்போது புதுப்புது சேலஞ்சுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் என்பதும் கடந்த சில ஆண்டுகளில் ஐஸ்கட்டி சேலஞ்ச் உள்பட பல்வேறு சேலஞ்சுகள் வைரல் ஆகி வருவதும் தெரிந்தது

அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே மரம் நடும் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ராஜ்யசபா எம்பி சந்தோஷ் குமார் அவர்கள் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை சமந்தாவுக்கு மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை கொடுத்துள்ளார்

இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட நாகார்ஜுனா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தங்களது தோட்டத்தில் 3 செடிகளை வைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தனர். இது குறித்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது சேலஞ்சை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்ததற்காக எம்பி சந்தோஷ் குமார் அவர்கள் சமந்தாவுக்கும் நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமந்தா இந்த சேலஞ்சை தொடரும் வகையில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது ரசிகர்கள் பகிர்ந்துள்ளார். இவர்கள் தனது சேலஞ்சை ஏற்று மூன்று செடிகள் நடவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்

உலகம் முழுவதும் மரங்களை அதிகம் நட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.