close
Choose your channels

மன அமைதிக்காக சமந்தாவின் ஆன்மீக பயணம்: யாருடன் சென்றார் தெரியுமா?

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக சமந்தாவின் விவாகரத்து குறித்து ஒருசில ஊடகங்களில் வதந்திகள் வெளியாகின என்பதும், சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் உள்ளிட்ட வதந்தி பரவியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மன அமைதியை தேடி சமந்தா ஆன்மீக பயணம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரிஷிகேஷ் சென்றதாகவும் அங்கு உள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்திற்கு சென்றதாகவும் அங்கு தான் ஆழ்நிலை தியான பயிற்சி செய்ததாகவும் குறிப்பாக அங்குள்ள சில புகழ்பெற்ற புத்தகங்களில் உள்ள பாடல்களை தான் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமந்தா இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தில் அவருடைய நெருங்கிய தோழி உடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய இடங்களுக்கு அவர் சுற்றுப் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்புவார் என்றும் அதன் பிறகுதான் ஒப்புக் கொண்ட இரண்டு புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.