close
Choose your channels

சமந்தா விவாகரத்து முடிவு குறித்து தந்தை பகிர்ந்த உணர்ச்சிகரமான பதிவு!

Tuesday, September 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா திடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த விவாகரத்து முடிவு குறித்து சமந்தாவின் தந்தை தனது பேஸ்புக்கில் உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர், ‘முதலில் சமந்தாவின் முடிவை அறிந்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ஆனால் இது அவரது முடிவை என்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே தனக்கு ஒன்றுதான் என்று கூறியதோடு திருமண புகைப்படங்கள் மற்றும் வரவேற்பு புகைப்படங்களையும் பதிவு செய்து இன்னும் அதை தான் மறக்கவில்லை என்பதை தெரிவித்து உள்ளார்.

மேலும் நாகசைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறேன் என்றும் விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சமந்தாவின் அப்பா பதிவு செய்துள்ளார். இந்த பதிவை சமந்தா ரசிகர்கள் மட்டுமின்றி நாக சைதன்யாவின் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.