close
Choose your channels

விவாகரத்து விவகாரம்: சமந்தா பதிவு செய்த அவதூறு வழக்கால் பரபரப்பு!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து தமிழ் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சமந்தாவின் விவாகரத்து குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளத்தில் பரவியது என்பதும் குறிப்பாக அவர் குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும், வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதாகவும் வதந்திகள் பரவியது. இதனை அடுத்து சமந்தா இது குறித்து விளக்கமளித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா குறித்தும் அவரது விவாகரத்து விவகாரம் குறித்தும் அவதூராக செய்திகளை பரப்பிவந்த யூடியூப் சேனல்கள் சிலவற்றின் மீது சமந்தா அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து தனது வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல்களுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.