close
Choose your channels

ராஜ்&டிகே வெப்தொடரில் இருந்து சமந்தா விலகலா? முக்கிய அறிவிப்பு!

Wednesday, February 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தி பேமிலி மேன்’ என்ற வெப்தொடரை இயக்கிய ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகும் அடுத்த வெப் தொடரில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நடிகை சமந்தா திடீரென மயோசிட்டி சென்ற நோயின் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால் இந்த வெப்தொடரில் இருந்து விலகியதாக செய்திகள் கசிந்தன.

இந்த நிலையில் தற்போது ராஜ்&டிகே இயக்கத்தில் சமந்தா நடிக்கும் தொடர் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘சிட்டாடல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சமந்தா நடிப்பது உறுதி என்று கூறியுள்ள ராஜ்&டிகே, படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டதாகவும் அறிவித்துள்ளனர். எனவே ராஜன் ராஜ்&டிகே இயக்கும் தொடரிலிருந்து சமந்தா விலகவில்லை என்பது இந்த அறிவிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராஜ்&டிகே தங்களது சமூக வலைத்தளத்தில் சமந்தாவின் சூப்பர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. ‘சிட்டாடல்’ வெப்தொடர் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.