சமந்தா தான் எனக்கு சரியான ஜோடி: நாக சைதன்யா

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்ட நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இது குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள மேலும் ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும் அவர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் உடன் நடிக்க விரும்புவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

More News

இதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து நடிகை கஸ்தூரி!

கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அவர்களது ரசிகர்களுக்கு

இதெல்லாம் தேவையா? நெட்பிளிக்ஸின் 'மணி ஹெய்ஸ்ட்' அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கேள்வி!

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான 'மணி ஹெய்ஸ்ட்' என்ற வெப்சீரிஸ் மிக உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐந்தாம் சீசனின் இரண்டாம்

கார் வேண்டாம், வேறு ஏதாவது கொடுங்கள்: முதல்வருக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கார் பரிசு அளிப்பதற்கு பதிலாக வேறு ஏதேனும் பரிசு அளிக்கலாம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரொனால்டோவுக்கு கிடைத்த சிறப்பு விருது… உற்சாகத்தில் பொங்கும் ரசிகர்கள்!

சர்வதேச கால்பந்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்காக

அகமதாபாத் அணி எடுத்த திடீர் முடிவு… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12, 13 ஆம்