சமந்தாவின் திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 26 2016]

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் விரைவில் இவர்களது திருமண நிச்சயதார்த்த தேதி மற்றும் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2017 ஜனவரி 29ஆம் தேதி சமந்தா-நாகசைதன்யாவின் நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளது. திருமண தேதியை தனது தந்தை நாகார்ஜூனா விரைவில் முறைப்படி அறிவிப்பார் என்று நாக சைதன்யா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் சமந்தா நடிப்பது குறித்து நாக சைதன்யா கூறியபோது, 'திருமணத்திற்கு பின்னர் நடிப்பது அவரது விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். நான் அவரது நடிப்புத்திறமையையும், வளர்ச்சியையும் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். திருமணத்திற்கு பின்னர் அவர் நடிக்க விரும்பினால் நான் அதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு 'தெறி', '24' உள்பட 6 வெற்றி படங்களில் நடித்துள்ள சமந்தா, விஷாலுடன் 'இரும்புத்திரை', மற்றும் விஜய்சேதுபதியுடன் 'அதே கண்கள்' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜல்லிக்கட்டு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யா

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை

'அம்மா' பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் கராத்தே ஹூசைனி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியும், கராத்தே கலைஞருமான ஹூசைனி புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

ஜெ. மரணத்திற்கு காரணமானார்களை விட மாட்டேன். சசிகலாபுஷ்பா சபதம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக தொடர்ந்து கூறி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா,

ஓபிஎஸ்-க்கு எம்.ஜி,.ஆர் உறவினர் ஆதரவு.

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆரின் உறவினர்கள் இன்று எம்.ஜி.,ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன ராவ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.

தமிழகத்தின் தலைமைச்செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை