close
Choose your channels

அமீர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் வைத்த விருந்து: சமந்தா கலந்து கொண்டாரா?

Saturday, September 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு ஐதராபாத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் இரவு விருந்து வைத்த நிலையில் இந்த விருந்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அமீர்கான் தனது படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத் வந்தார். அமீர்கான் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பதால் அமீர்கானுக்கு நாகார்ஜுனா இரவு விருந்து வைக்க விரும்பினார். இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமீர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் இரவு விருந்து வைத்தனர்.

இந்த விருந்தில் நாகார்ஜுனா குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்ட நிலையில் சமந்தா மட்டும் இடம்பெறவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிய போகிறார்கள் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் பரவிவரும் நிலையில் நாகார்ஜுனா குடும்பத்தினர் வைத்த இந்த விருந்தில் சமந்தா கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் இதுவரை இந்த செய்தி வதந்தியாகவே உலாவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.