அமீர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் வைத்த விருந்து: சமந்தா கலந்து கொண்டாரா?

  • IndiaGlitz, [Saturday,September 25 2021]

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு ஐதராபாத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் இரவு விருந்து வைத்த நிலையில் இந்த விருந்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அமீர்கான் தனது படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத் வந்தார். அமீர்கான் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பதால் அமீர்கானுக்கு நாகார்ஜுனா இரவு விருந்து வைக்க விரும்பினார். இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமீர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் இரவு விருந்து வைத்தனர்.

இந்த விருந்தில் நாகார்ஜுனா குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்ட நிலையில் சமந்தா மட்டும் இடம்பெறவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிய போகிறார்கள் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் பரவிவரும் நிலையில் நாகார்ஜுனா குடும்பத்தினர் வைத்த இந்த விருந்தில் சமந்தா கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் இதுவரை இந்த செய்தி வதந்தியாகவே உலாவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரம்யா பாண்டியனின் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்': பிசி ஸ்ரீராம் பாராட்டு

நடிகை ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் அரசில் மூர்த்தி என்பவர் இயக்கத்தில் உருவான 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியானது

பிரபல தயாரிப்பாளர் கேயார் மனைவி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல வினியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் அவர்களின் மனைவி திருமதி இந்திரா நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் செல்லும் மேலும் ஒரு விஜய் டிவி தொகுப்பாளினி?

விஜய் டிவியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகியின் க்யூட் போட்டோஸ்… வியந்து பாராட்டும் ரசிகர்கள்!

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் “ஏஞ்சல்“ எனும் புது திரைப்படத்தில்

குழந்தைக்காக எதற்கும் துணிந்த தாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மனித உறவுகளில் தாய்மை உணர்வுதான் எப்போதும் வியந்து கொண்டாடப்படுகிறது. காரணம்