close
Choose your channels

நயனுடன் எனக்கு இருக்கும் உறவு… மனம் திறந்த நடிகை சமந்தாவின் வைரல் பதிவு!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா சமூகவலைத் தளப்பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவருவதும் அவர் பதிவிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் வேறலெவல் வைரலாகி வருவதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அவர் தற்போது பதிவிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடிகை சமந்தாவும் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் பல பிரபலங்களின் நட்பை சம்பாதித்து வைத்திருக்கும் நடிகை சமந்தாவிற்கு இந்தத் திரைப்படத்தின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நெருங்கிய தோழியாக மாறிப்போனார்.

இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்ட நயன்தாராவும் சமந்தாவும் படு ஜாலியாக இருந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றது. அந்த வகையில் சிறப்பு நாளான இன்று (22.02.2022) நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

மேலும் சிறப்பான நாளில் எங்களது சிறப்பான நட்பு… நயன்தாரா சமூகவலைத் தளப்பக்கங்களில் இல்லை. ஆனாலும் அவர் தனது அன்பை உங்களுக்கு அனுப்புகிறார் என நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். எனது சிறப்பான நட்பு என்று நடிகை நயன்தாராவைப் பற்றி நடிகை சமந்தா தெரிவித்திருக்கும் இந்தப் பதிவு நம்மையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

இந்நிலையில் நயன்தாராவும் சமந்தாவும் இணைந்து நடித்துள்ள “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.