ஜீவனாம்சத்தை மறுத்தாரா சமந்தா? எத்தனை கோடி தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,October 02 2021]

பிரபல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சற்று முன் தங்களது சமூக வலைத்தளத்தில் கணவன் மனைவியாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இந்த அறிவிப்பு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாகசைதன்யா குடும்பத்தினர் சமந்தாவுக்கு ரூபாய் 200 கோடி ஜீவனாம்சம் தர முன் வந்ததாகவும் அந்த பணத்தை வாங்க சமந்தா மறுத்து விட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிரபல நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இருவரும் பிரிய முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் சற்று முன்னர் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் கணவன் மனைவியாக இருவரும் பிரிய இருப்பதை உறுதி செய்ததோடு தங்கள் நட்பை தொடர உள்ளதாக தெரிவித்தனர். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் நாகார்ஜுனா குடும்பத்தினர் சமந்தாவுக்கு ரூபாய் 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் தன்னைப் பார்த்துக் கொள்ள தனக்கு தெரியும் என்றும் ஜீவனாம்சம் தேவையில்லை என்று சமந்தா கூறியதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமந்தா குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

பிரபல நட்சத்திர தம்பதிகள் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய முடிவு செய்து அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் அறிவித்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகமே பெரும் பரபரப்பை

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை முந்திய எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.'

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மாற்றம் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்.' இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

நீங்க நம்பலைனாலும் இதான் நெசம்: 'சார்பாட்டா பரம்பரை' குறித்த முக்கிய அறிவிப்பு!

பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பதும்

விஜய்சேதுபதி அளித்த ரூ.1 கோடி நிதியுதவி: திரையுலகினர் இன்ப அதிர்ச்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெப்ஸி தொழிலாளர்களுக்கான ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்ததை அடுத்து திரையுலகினர் இன்ப அதிர்ச்சி அடைந்து விஜய்சேதுபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

அதிதி ஷங்கர் படப்பிடிப்பு திடீர் ரத்து: இந்த பிரபல நடிகர் காரணமா?

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் 'விருமன்' படத்தின் படப்பிடிப்பு வரும் தீபாவளி வரை நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த படப்பிடிப்பை