close
Choose your channels

3 ஆண்டாக கர்ப்பமாக உள்ளேன், குழந்தை வெளியே வரமாட்டேங்குது: சமந்தா

Sunday, August 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா திருமணத்திற்கு பின்னரும் பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒருசில படங்களிலும் அவர் நடித்து வந்தார்.

இந்த நிலையில் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அவரிடம் ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்ற கேள்வியை தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றனர். அவரும் இந்த கேள்விகளுக்கு சளைக்காமல் ‘இல்லை’ என்று பதிலை கூறி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ’நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா’ என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நானும் 2017 ஆம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக தான் இருக்கின்றேன். ஆனால் குழந்தை தான் வெளியே வர மாட்டேங்குது’ என்று என் காமெடியாக பதில் சொல்லியுள்ளார். சமந்தாவின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் சமந்தா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.